" பசுமையான எதிர்காலத்திற்கு மரம் நடுவோம் " மரநடுகை செயற்திட்டம்
புனித நீக்கொலார் கழகத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் சமூக மேம்பாட்டுப் பணிகளில் ஒன்றான சூழல் நேய திட்டமான மரநடுகை செயற்திட்டம் " பசுமையான எதிர்காலத்திற்கு மரம் நடுவோம் " எனும் தொனி பொருளில் கார்த்திகை மாதம் 2ஆம் திகதி உத்தியோகபூர்வமாக எமது பங்குத்தந்தையினால் சேமக்காலையின் சிற்றாலயச் சூழலில் முதலாவது மரக்கன்று நாட்டப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து முன்னாள் கழக அங்கத்தவர்கள் மற்றும் இன்னாள் கழக அங்கத்தவர்களால் மிருசுவில் புனித நீக்கொலார் ஆலய வளாகம், ஆலயத்தின் முன்பாக A9 வீதியோரம், புனித நீக்கொலார் ஆலய சேமக்காலை ஆகிய இடங்களில் பயன்தரு நிழல் மரங்கள் நாட்டப்பட்டது.
அது மட்டும் அல்லாது அம்மரங்களை பாதுகாக்க தேவையான ஏற்பாடுகள் அனைத்தும் பூரணமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் தொடர்ந்தும் அவற்றை நீர் ஊற்றி பராமரிப்பதற்குரிய பொறுப்பை புனித நீக்கொலார் கழகம் ஏற்றுள்ளது என்பதனையும் அறியத்தருகின்றோம்.
இத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டதிலிருந்து இதுவரை மொத்தமாக 21 மரக்கன்றுகள் நாட்டப்பட்டுள்ளது.
தொடர்ந்து இச் சூழல்நேயத்திட்டத்தின் ஊடக பொது இடங்களில் மரக்கன்றுகள் நாட்டுதல், மரக்கன்றுகளை பராமரித்தல், மரக்கன்றுகளை இலவசமாக பொது அமைப்புகளுக்கு வழங்குதல், சூழல்பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடுகள் போன்றவற்றில் ஈடுபட உள்ளோம் என்பதனையும் மகிழ்வோடு அறியத்தருகின்றோம்.
அதனைத்தொடர்ந்து முன்னாள் கழக அங்கத்தவர்கள் மற்றும் இன்னாள் கழக அங்கத்தவர்களால் மிருசுவில் புனித நீக்கொலார் ஆலய வளாகம், ஆலயத்தின் முன்பாக A9 வீதியோரம், புனித நீக்கொலார் ஆலய சேமக்காலை ஆகிய இடங்களில் பயன்தரு நிழல் மரங்கள் நாட்டப்பட்டது.
அது மட்டும் அல்லாது அம்மரங்களை பாதுகாக்க தேவையான ஏற்பாடுகள் அனைத்தும் பூரணமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் தொடர்ந்தும் அவற்றை நீர் ஊற்றி பராமரிப்பதற்குரிய பொறுப்பை புனித நீக்கொலார் கழகம் ஏற்றுள்ளது என்பதனையும் அறியத்தருகின்றோம்.
இத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டதிலிருந்து இதுவரை மொத்தமாக 21 மரக்கன்றுகள் நாட்டப்பட்டுள்ளது.
தொடர்ந்து இச் சூழல்நேயத்திட்டத்தின் ஊடக பொது இடங்களில் மரக்கன்றுகள் நாட்டுதல், மரக்கன்றுகளை பராமரித்தல், மரக்கன்றுகளை இலவசமாக பொது அமைப்புகளுக்கு வழங்குதல், சூழல்பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடுகள் போன்றவற்றில் ஈடுபட உள்ளோம் என்பதனையும் மகிழ்வோடு அறியத்தருகின்றோம்.
சேமக்காலை சிரமதானப்பணி -2021
இறந்த ஆத்துமாக்கள் பெருநாளை முன்னிட்டு சேமக்காலையையும் அதன் சுற்றுப்பறத்தையும் துப்பரவாக்குவதற்காக மிருசுவில் புனித நீக்கொலார் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிரமதானப்பணியின் முதலாம் கட்டம் ஞாயிற்றுக்கிழமை (24/10/2021) மேற்கொள்ளப்பட்டது.
பாடசாலை மாணவர்களுக்கான இணையத்தரவுப்பொதி (Internet Data packages)
எமது நாட்டில் கொரோனாத் தொற்றுநோயின் காரணமாகப் பாடசாலை மாணவர்களுக்கான கற்பித்தல் செயற்பாடுகள் அனைத்தும் இணையவழித் தொடர்பாடல் (Internet Learning) மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே அவற்றை அணுகுவதற்கான இணையத்தரவுப்பொதியே (Internet Data packages) மாணவர்களின் அத்தியாவசியத் தேவையாகத் தற்காலத்தில் மாற்றமடைந்துள்ளது. இணையத்தரவுப்பொதி இல்லாத காரணத்தினால் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் பின்னடைவைச் சந்திக்கக்கூடாதென்ற நோக்கத்தைக் கருத்தில் கொண்டு பாடசாலை மாணவர்களுக்காக புனித நீக்கொலார் கழகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் கிராமிய மற்றும் சமுதாய அபிவிருத்திச் செயற்பாடுகளின் ஒர் அங்கமாக மிருசுவில் றோமன் கத்தோலிக்கத் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி பயிலும் 28 மாணவர்களுக்கும் குடமியன் அரச தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் 29 மாணவர்களுக்கும், இதனைத்தவிர இவ்விரண்டு பாடசாலைகளிலும் கல்வி கற்காத மிருசுவில் பிரதேசத்தில் வசிக்கும் 18 மாணவர்களும் உள்ளடங்கலாக மொத்தமாக 75 மாணவர்களுக்கு ஒவ்வொருவருக்குமாக தலா (SriLankan Rupees-500) ஐந்நூறு ரூபாய் பெறுமதியான மொத்தமாக முப்பத்தேழாயிரத்து ஐந்நூறு (SriLankan Rupees - 37500) ரூபாய் பெறுமதியான கற்றல் செயலிகளை (work and learn packs - MS Teams & Zoom) மட்டும் பயன்படுத்துவதற்கான பிரத்தியேக தரவுப்பொதிகள் (specialized internet data packages) புனித நீக்கொலார் கழகத்தினால் மீள்நிரப்பிக்கொடுக்கப்பட்டன (reloaded).
உறவுக்கு கை கொடுப்போம் - புனித நீக்கொலார் கழகத்தின் உதவித்திட்டம் கட்டம் -2 (07.05.2020)
''Covid-19 '' தொற்று நோய் தாக்கத்தின் விழைவினால் ஏற்பட்டுள்ள தொடர் ஊரடங்கு மற்றும் இக்கட்டான நிலைமைகள் காரணமாக பொருளாதார மற்றும் வாழ்வியல் சார்ந்த நெருக்கடிக்குள் எமது உறவுகள் வாழ்ந்து வருகின்ற இச்சூழ்நிலையில் மிருசுவில் மக்களுக்கான "உறவுக்கு கை கொடுப்போம்" என்ற தொனிப் பொருளுடன் புனித நீக்கொலார் கழகத்தினால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற உதவித்திடடம் கட்டம் - 2 இற்குள் இம்முறை 150 குடும்பங்களை உள்வாங்கி அவர்களுக்கான உலருணவு - அத்தியாவசிய பொருட்கள் வழங்குகின்ற நிகழ்வு 07.05.2020 அன்று தொடக்கம் நடைபெற்று வருகின்றன.
இச்சந்தர்ப்பத்தில் இம்முயற்சிக்கு இரவுபகலாக உழைத்து வருகின்ற ஒவ்வொரு கழக உறுப்பினர்களுக்கும் ஒத்துழைப்பு நல்கிய அனைத்து உள்ளங்களுக்கும் மிக்க நன்றியும் பாராட்டுதலும் உரித்தாகுக.
அனைத்திற்கும் மேலாக புனித நீக்கொலார் கழகத்தின் உதவித்திட்டம் கட்டம் -2 செயற்றிட்டததிற்கு நிதி அனுசரணை வழங்கிய திரு திருமதி இ.வோல்ரன் - ஜெசி குடும்பத்தினரை இச்சந்தர்ப்பத்தில் நன்றியுடன் நினைவு கூருவதுடன் இந்த நல் உபகாரத்திற்காக அவரகளை வாழ்த்துகின்றோம்
நன்றி.
தலைவர்
புனித நீக்கொலார் கழகம்
மிருசுவில்.
08.05.2020
இச்சந்தர்ப்பத்தில் இம்முயற்சிக்கு இரவுபகலாக உழைத்து வருகின்ற ஒவ்வொரு கழக உறுப்பினர்களுக்கும் ஒத்துழைப்பு நல்கிய அனைத்து உள்ளங்களுக்கும் மிக்க நன்றியும் பாராட்டுதலும் உரித்தாகுக.
அனைத்திற்கும் மேலாக புனித நீக்கொலார் கழகத்தின் உதவித்திட்டம் கட்டம் -2 செயற்றிட்டததிற்கு நிதி அனுசரணை வழங்கிய திரு திருமதி இ.வோல்ரன் - ஜெசி குடும்பத்தினரை இச்சந்தர்ப்பத்தில் நன்றியுடன் நினைவு கூருவதுடன் இந்த நல் உபகாரத்திற்காக அவரகளை வாழ்த்துகின்றோம்
நன்றி.
தலைவர்
புனித நீக்கொலார் கழகம்
மிருசுவில்.
08.05.2020
உறவுக்கு கை கொடுப்போம் - புனித நீக்கொலார் கழகத்தின் உதவித்திட்டம் - (29.042020)
உலகளாவிய ரீதியில் ''Covid-19 ''தொற்று நோய் தாக்கத்தின் விழைவினால் ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலைமைகள் காரணமாக பொருளாதார மற்றும் வாழ்வியல் சார்ந்த நெருக்கடிக்குள் வாழ்ந்து வருகின்ற இச்சூழ்நிலையில் மிருசுவில் புனித நீக்கொலார் ஆலய பங்குமக்களுக்கான "உறவுக்கு கை கொடுப்போம்" என்ற தொனிப் பொருளுடன் புனித நீக்கொலார் கழகத்தினால் 125 குடும்பங்களுக்கான உலருணவு வழங்குகின்ற நிகழ்வு 29.04.2020 அன்று தொடக்கம் நடைபெற்று வருகின்றன. இச்செயற்றிட்டம் சமூகத்தில் நல்ல வரவேற்பையும் பலருடைய பாராட்டுதலையும் பெற்றுள்ளதுடன், எமது சமூகத்தின் நல்ல உறவு நிலையினை மேம்படுத்துவதற்கு கிடைத்த வாய்ப்பினையிட்டு மகிழ்வுடன் நிறைவடைகின்றோம்.
இச்சந்தர்ப்பத்தில் இம்முயற்சிக்கு இரவுபகலாக உழைத்த ஒவ்வொரு கழக உறுப்பினர்களுக்கும் எம்முடன் இணைந்து செயற்பட்ட திரு.செ.ஜெனந்தரத்தினம் அவர்களுக்கும் ஒத்துழைப்பு நல்கிய அனைத்து கரங்களுக்கும் உள்ளங்களுக்கும் மிக்க நன்றியும் பாராட்டுதலும் உரித்தாகுக.
அனைத்திற்கும் மேலாக புனித நீக்கொலார் கழகத்திற்கு நிரந்தரமான வருமான ஈட்டிற்கு வழிசமைத்த திரு செல்வநாயகம் வின்சன் - விக்னா குடும்பத்தினரை இச்சந்தர்ப்பத்தில் நன்றியுடன் நினைவு கூறுகின்றோம்.
நன்றி.
தலைவர்
புனித நீக்கொலார் கழகம்
மிருசுவில்.
இச்சந்தர்ப்பத்தில் இம்முயற்சிக்கு இரவுபகலாக உழைத்த ஒவ்வொரு கழக உறுப்பினர்களுக்கும் எம்முடன் இணைந்து செயற்பட்ட திரு.செ.ஜெனந்தரத்தினம் அவர்களுக்கும் ஒத்துழைப்பு நல்கிய அனைத்து கரங்களுக்கும் உள்ளங்களுக்கும் மிக்க நன்றியும் பாராட்டுதலும் உரித்தாகுக.
அனைத்திற்கும் மேலாக புனித நீக்கொலார் கழகத்திற்கு நிரந்தரமான வருமான ஈட்டிற்கு வழிசமைத்த திரு செல்வநாயகம் வின்சன் - விக்னா குடும்பத்தினரை இச்சந்தர்ப்பத்தில் நன்றியுடன் நினைவு கூறுகின்றோம்.
நன்றி.
தலைவர்
புனித நீக்கொலார் கழகம்
மிருசுவில்.
மிருசுவில் மீழ்ச்சிபெற……… (2014)
அன்புக்குரியவர்களே மிருசுவிலில் பிறந்த அல்லது உரித்துடைய – பிறந்த மண்ணை நேசிக்கத்துடிக்கும் ஒவ்வொரு உள்ளங்களுக்கும் வணக்கம்….
எமது வரலாற்றுக் கிராமம் கடந்த கால் நுற்றாண்டு காலமாக போரும் இடப்பெயர்வும் என மாறிமாறி பல பாதிப்புகளுக்கு உள்ளாகி அதிகமானவர்கள் கிராமத்தினை விட்டு வெளியேறி பல்வேறு பிரதேசங்களில் குடியேறி விட்ட நிலையில் எமது கிராமத்தின் மத்திய பிரதேசம் இனப்போரின் எல்லைப்பிரதேசங்களாக நீண்டகாலமாக – இராணுவ பிரசன்னத்துடனும் முகாங்களுடனும்தான் இருந்தமை யாவரும் அறிந்தவையே. தற்போது – கடந்த வாரம் இராணுவத்தினர் முழுமையாக வெளியேறி சென்றுவிட்டனர்.
எமது தாயகப்பிரதேசங்கள் எங்கும் அழிவுகளில் இருந்து படிப்படியாக விடுபட்டு அபிவிருத்தித் திட்டங்களும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்ற இக்கால கட்டத்தில் எமது கிராமத்தினையும் நோக்கவேண்டிய வரலாற்றுக்கடமை எமக்கிருப்பதை மறந்துவிட முடியாது.
எமது கிராமத்தின் மத்திய பிரதேசங்களாகிய புனித நீக்கொலார் ஆலயம் பங்கு மக்களின் ஒத்துழைப்பினால் பொலிவடைந்து வருகின்றது, பிரதான வீதிகளும் புகையிரத வீதி,நிலையம் மற்றும் ப.கூ.சங்க கட்டடம் போன்றன மீழ்ச்சி பெற்ற நிலையில் இவற்றினை மையமாகக்கொண்ட பிரதேசங்கள் – தனியார் நிலங்கள் கைவிடப்பட்ட நிலையிலும், உரிமை கோரப்படாத – பராமரிப்பற்று பற்றைகளாகவும் புதர்களாகவும் இருப்பதுடன் சில பிரதேசங்களில் எந்தவிதத்திலும் தொடர்புபடாத – சட்டவிரோத குடியிருப்புக்களும் வர்த்தக நிலையங்களையும் உருவாக்கி எமது கிராமத்தின் பூர்வீக பண்பாடுகளுக்கு பாதகமான நிலையினை ஏற்படுத்திக் கெபண்டிருப்பதனை சம்பந்தப்பட்ட காணி உரிமையாளர்களுக்கும் – உறவினர்களுக்கும் இத்தளத்தின் ஊடாக அறிவிக்க விரும்புகின்றோம்.
மிருசுவிலின் முக்கிய மத்திய பிரதேசங்கள் இவ்வான நிலமைகளில் இருப்பதனால் நகர அபிவிருத்தியை நோக்கிய எந்த முன்னேற்றங்களையும் ஏற்படுத்த முடியாதுள்ளது. அன்பான மேற்படி காணி உரித்துடையோர்களே உங்களுக்கு விரும்பிய – முறையாக பயன்படுத்தக்கூடிய அல்லது பராமரிக்கக்கூடிய உங்கள் உறவினர்களுக்கு உங்கள் காணிகளை கொடுத்து எமது கிராமத்தினை அழகாகவும் சுத்தமாகவும் மாற்றியமைக்க ஒத்துழைப்புத்தந்து உதவுமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
மேற்படி பிரதேசங்களை துப்ரவு செய்து அழகுடைய மிருசுவில் கிராமத்தினை உருவாக்குவதற்கு மிருசுவில் புனித நீக்கொலார் கழகத்தினர் முன்வந்துள்ளனர் இவர்களுடைய முயற்சியினால் மேற்படி முக்கிய பிரதேசங்களில் உள்ள பற்றைக்காடுகளை துப்பரவு செய்யும் ஆரம்ப செயற்றிட்டத்தினை சிரமதான முறைமூலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (26.01.2014) ஆரம்பித்துள்ளனர் இவர்களுடைய முயற்சிக்கு தங்கள் ஒத்துழைப்புக்களை வழங்கி உங்கள் கிராமத்தின் நற்பணிக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம். அடுத்த முயற்சிகளாக மிருசுவில் நந்தியில் அழகு பூந்தோட்டம் அமைத்தல், பொது பஸ்தரிப்பிடம் அமைத்தல் போன்ற செயற்றிட்டங்களை முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இவற்றிற்கு உங்கள் எல்லோருடைய ஒத்துழைப்பினையும் வேண்டிநிற்கின்றோம். உங்கள் உறவினர் நினைவாக யாரும் மேற்படி பணிகளை செய்துகொள்ள விரும்பினால் எம்முடன் அல்லது மிருசுவில் பங்குத்தந்தையுடன் தொடர்புகொள்ளவும்.
நன்றி.
தலைவர்,
புனித நீக்கொலார் கழகம்,
மிருசுவில்,
இலங்கை.
அன்புக்குரியவர்களே மிருசுவிலில் பிறந்த அல்லது உரித்துடைய – பிறந்த மண்ணை நேசிக்கத்துடிக்கும் ஒவ்வொரு உள்ளங்களுக்கும் வணக்கம்….
எமது வரலாற்றுக் கிராமம் கடந்த கால் நுற்றாண்டு காலமாக போரும் இடப்பெயர்வும் என மாறிமாறி பல பாதிப்புகளுக்கு உள்ளாகி அதிகமானவர்கள் கிராமத்தினை விட்டு வெளியேறி பல்வேறு பிரதேசங்களில் குடியேறி விட்ட நிலையில் எமது கிராமத்தின் மத்திய பிரதேசம் இனப்போரின் எல்லைப்பிரதேசங்களாக நீண்டகாலமாக – இராணுவ பிரசன்னத்துடனும் முகாங்களுடனும்தான் இருந்தமை யாவரும் அறிந்தவையே. தற்போது – கடந்த வாரம் இராணுவத்தினர் முழுமையாக வெளியேறி சென்றுவிட்டனர்.
எமது தாயகப்பிரதேசங்கள் எங்கும் அழிவுகளில் இருந்து படிப்படியாக விடுபட்டு அபிவிருத்தித் திட்டங்களும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்ற இக்கால கட்டத்தில் எமது கிராமத்தினையும் நோக்கவேண்டிய வரலாற்றுக்கடமை எமக்கிருப்பதை மறந்துவிட முடியாது.
எமது கிராமத்தின் மத்திய பிரதேசங்களாகிய புனித நீக்கொலார் ஆலயம் பங்கு மக்களின் ஒத்துழைப்பினால் பொலிவடைந்து வருகின்றது, பிரதான வீதிகளும் புகையிரத வீதி,நிலையம் மற்றும் ப.கூ.சங்க கட்டடம் போன்றன மீழ்ச்சி பெற்ற நிலையில் இவற்றினை மையமாகக்கொண்ட பிரதேசங்கள் – தனியார் நிலங்கள் கைவிடப்பட்ட நிலையிலும், உரிமை கோரப்படாத – பராமரிப்பற்று பற்றைகளாகவும் புதர்களாகவும் இருப்பதுடன் சில பிரதேசங்களில் எந்தவிதத்திலும் தொடர்புபடாத – சட்டவிரோத குடியிருப்புக்களும் வர்த்தக நிலையங்களையும் உருவாக்கி எமது கிராமத்தின் பூர்வீக பண்பாடுகளுக்கு பாதகமான நிலையினை ஏற்படுத்திக் கெபண்டிருப்பதனை சம்பந்தப்பட்ட காணி உரிமையாளர்களுக்கும் – உறவினர்களுக்கும் இத்தளத்தின் ஊடாக அறிவிக்க விரும்புகின்றோம்.
மிருசுவிலின் முக்கிய மத்திய பிரதேசங்கள் இவ்வான நிலமைகளில் இருப்பதனால் நகர அபிவிருத்தியை நோக்கிய எந்த முன்னேற்றங்களையும் ஏற்படுத்த முடியாதுள்ளது. அன்பான மேற்படி காணி உரித்துடையோர்களே உங்களுக்கு விரும்பிய – முறையாக பயன்படுத்தக்கூடிய அல்லது பராமரிக்கக்கூடிய உங்கள் உறவினர்களுக்கு உங்கள் காணிகளை கொடுத்து எமது கிராமத்தினை அழகாகவும் சுத்தமாகவும் மாற்றியமைக்க ஒத்துழைப்புத்தந்து உதவுமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
மேற்படி பிரதேசங்களை துப்ரவு செய்து அழகுடைய மிருசுவில் கிராமத்தினை உருவாக்குவதற்கு மிருசுவில் புனித நீக்கொலார் கழகத்தினர் முன்வந்துள்ளனர் இவர்களுடைய முயற்சியினால் மேற்படி முக்கிய பிரதேசங்களில் உள்ள பற்றைக்காடுகளை துப்பரவு செய்யும் ஆரம்ப செயற்றிட்டத்தினை சிரமதான முறைமூலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (26.01.2014) ஆரம்பித்துள்ளனர் இவர்களுடைய முயற்சிக்கு தங்கள் ஒத்துழைப்புக்களை வழங்கி உங்கள் கிராமத்தின் நற்பணிக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம். அடுத்த முயற்சிகளாக மிருசுவில் நந்தியில் அழகு பூந்தோட்டம் அமைத்தல், பொது பஸ்தரிப்பிடம் அமைத்தல் போன்ற செயற்றிட்டங்களை முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இவற்றிற்கு உங்கள் எல்லோருடைய ஒத்துழைப்பினையும் வேண்டிநிற்கின்றோம். உங்கள் உறவினர் நினைவாக யாரும் மேற்படி பணிகளை செய்துகொள்ள விரும்பினால் எம்முடன் அல்லது மிருசுவில் பங்குத்தந்தையுடன் தொடர்புகொள்ளவும்.
நன்றி.
தலைவர்,
புனித நீக்கொலார் கழகம்,
மிருசுவில்,
இலங்கை.
மிருசுவில் புனித நீக்கொலார் கழகத்தினரின் சிரமதானப்பணி பதிவுகள் சில.....
புனித நீக்கொலார் கழகத்தின் உருவாக்கத்தில் 2013 ஒளிவிழாவில் அரங்கேற்றப்பட்ட
”மனிதத்தை தேடிய இறைமகன்” - ஒரு சமூக நாடகம்
புனித நீக்கொலார் கழகத்தின் உருவாக்கத்தில் 2012 ஒளிவிழாவில் அரங்கேற்றப்பட்ட
”உலகு உய்யவந்த உத்தமன்” - வில்லுப்பாட்டு
Programme 1
From Mirusuvil St.Nicholas Community of Canada
Purchase of computers and required materials for development of computer knowledge of our Village Student.
- Project 1 Computer Educate Project (CEP)
Purchase of computers and required materials for development of computer knowledge of our Village Student.
Picture of SNC Unit Reconstruction for Computer Educated Project,
Full Supported by. Mirusuvil St.Nicholas Community of Canada
Opening Ceremony
கணனி ஆய்வுகூட திறப்புவிழா
நீக்கொலார் கழகத்திற்கான இணையத்தளம் (http//www.sncmirusuvil.weebly.com) மற்றும் கனடா வாழ் மிருசுவில் பங்கு மக்களின் உதவியுடன் முன்னெடுக்கப்படுகின்ற கணினி ஆய்வுகூடம் என்பன புனித நீக்கொலாரின் திருநாள் திருப்பலிக்கு பின்பு திறந்து வைக்கப்பட்டுள்ளன என்பதனை மகிழ்வுடன் அறியத்தருகின்றேன்
தலைவர்
புனித நீக்கொலார் கழகம்,
மிருசுவில்.