மிருசுவில் புனித நீக்கொலார் ஆலயத்தின் புதிய அருட்பணிச்சபையின் உறுப்பினர்கள் 26.03.2023 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை புனித நீக்கொலார் ஆலயத்தில் இடம்பெற்ற திருப்பலியின் போது உத்தியோகபூர்வமாக தமது கடமைகளை பொறுப்பேற்று கொண்டார்கள்.
அரசியல் நிலைப்பாடுகள், பேதங்களை மறந்து மக்களுக்கு சேவையாற்ற முன்வாருங்கள்: வடமாகாண உறுப்பினர் சயந்தன் அறைகூவல்
[ திங்கட்கிழமை, 04 நவம்பர் 2013, 02:09.51 PM GMT ]
வடக்கு மாகாண சபையின் உறுப்பினர்கள் கட்சி பேதங்களை மறந்து மக்களுக்கு சிறந்த சேவையாற்ற ஒன்றுபட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தன் தெரிவித்துள்ளார்.
யாழ்.மிருசுவில் பிரதேசத்தில் நடைபெற்ற சாவகச்சேரி பிரதேச சபையின் வாசிப்பு மாத பரிசளிப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
பிரதேச சபையின் தலைவர் சி.துரைராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஒவ்வொரு அரசியல் கட்சி உறுப்பினர்களுக்கும் அரசியல் நிலைப்பாடுகள் வெவ்வேறாக இருக்கலாம். ஒவ்வொரு கட்சிகளுக்கும் ஒவ்வொரு நிலைப்பாடு உண்டு.
ஆனால் அரசியல்வாதிகள் மக்களுக்கு சிறந்த சேவையினை வழங்க முன்வர வேண்டும். காரணம் அதற்காகவே மக்கள் அவர்களை தங்கள் பிரதிநிதிகளாக தெரிவு செய்துள்ளனர்.
எனவே கட்சி பேதங்களை மறந்து ஒவ்வொரு அரசியல்வாதிகளும் மக்களுக்கு சேவையாற்ற ஒற்றிணைய வேண்டும்.
தங்களது அரசியல் நிலைப்பாடுகளை ஒதுக்கி வைத்து வடமாகாண சபையில் உள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்களும் ஒன்றிணைய வேண்டும் என அவர் அறைகூவல் விடுத்தார்.
[ திங்கட்கிழமை, 04 நவம்பர் 2013, 02:09.51 PM GMT ]
வடக்கு மாகாண சபையின் உறுப்பினர்கள் கட்சி பேதங்களை மறந்து மக்களுக்கு சிறந்த சேவையாற்ற ஒன்றுபட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தன் தெரிவித்துள்ளார்.
யாழ்.மிருசுவில் பிரதேசத்தில் நடைபெற்ற சாவகச்சேரி பிரதேச சபையின் வாசிப்பு மாத பரிசளிப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
பிரதேச சபையின் தலைவர் சி.துரைராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஒவ்வொரு அரசியல் கட்சி உறுப்பினர்களுக்கும் அரசியல் நிலைப்பாடுகள் வெவ்வேறாக இருக்கலாம். ஒவ்வொரு கட்சிகளுக்கும் ஒவ்வொரு நிலைப்பாடு உண்டு.
ஆனால் அரசியல்வாதிகள் மக்களுக்கு சிறந்த சேவையினை வழங்க முன்வர வேண்டும். காரணம் அதற்காகவே மக்கள் அவர்களை தங்கள் பிரதிநிதிகளாக தெரிவு செய்துள்ளனர்.
எனவே கட்சி பேதங்களை மறந்து ஒவ்வொரு அரசியல்வாதிகளும் மக்களுக்கு சேவையாற்ற ஒற்றிணைய வேண்டும்.
தங்களது அரசியல் நிலைப்பாடுகளை ஒதுக்கி வைத்து வடமாகாண சபையில் உள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்களும் ஒன்றிணைய வேண்டும் என அவர் அறைகூவல் விடுத்தார்.
ஒளிவிழா 2012
மிருசுவில் புனித நீக்கொலார் ஆலய பங்குமக்களுக்கான பொது ஒளிவிழா நிகழ்வு எதிர்வரும் 23.12.2012 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணிக்கு ஆலய முன்றலில் பங்கு தந்தை தலமையில் நீக்கொலார் கழகத்தின் ஏற்பாட்டில் நிர்வாக சபையின் அனுசரணையுடன் சிறப்பாக - சுயாதீனமாக நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பல்வேறு கலை நிகழ்வுகளுடன் மிருசுவில் பங்கு கனடா ஒன்றியத்தின் உதவியுடன் புனித நீக்கொலார் கழகத்தினால் முன்னெடுக்கப்பட்ட கணனிக்கற்கை நெறியில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பரிசளிப்பு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன என்பதனை அறியத்தருவதுடன் இன்நிகழ்வுகளில் கலந்துகொண்டு சிறப்பிக்கும் வண்ணம் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
தலைவர்
புனித நீக்கொலார் கழகம், மிருசுவில்
தலைவர்
புனித நீக்கொலார் கழகம், மிருசுவில்